மொழி ரீதியாக தெளஹீத் என்பது (ஒன்றுபடுத்தினான்) وحّد يوحّد என்ற வினையின் மூல சொல்லாகும்.
அந்த வகையில் அல்லாஹ்வை ஏகத்துவம் செய்து (அவன் ஒருவன்), அவனது பண்புகளிலோ தாதிலோ (உள்ளமை) யாரும் அவனுக்கு ஒப்பாகவோ அல்லது அவனுடன் இணையவோ மாட்டார்கள் என்று கூறுபவன் (موحد) ஏகத்துவவாதி என்று அழைக்கப்படுவான்.
அரபிகள் واحد وأحد ووحيد என்ற வார்த்தைப் பிரயோகங்களை பாவிப்பர், அதாவது தனித்தவன் என்று பொருள்.
அல்லாஹ் ஒருவன், அவன் எல்லா நிலைகளிலும் ஒப்பு, உவமைகளை விட்டு நீங்கியவன்.
தவ்ஹீத் என்பது அல்லாஹ் ஒருவனே அவனுக்கு நிகர் யாருமில்லை என்று அறிந்து கொள்வது.
யார் அல்லாஹ்வை அவ்வாறு அறிந்து கொள்ளவில்லையோ, அல்லது அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லை என்று அறிந்து கொள்ளவில்லையோ, அவனை ஏகத்துவவாதி என்று கூற முடியாது.
தவ்ஹீத் என்பதற்கு கலை ரீதியான வரைவிலக்கணம்; அல்லாஹ்வை உலூஹிய்யத் ருபூபிய்யத் அஸ்மாஉ வஸ்ஸிபாத் சார்ந்த அம்சங்களில் தனித்துவமாக்குதல்.
அதாவது அல்லாஹ் தனித்தவன், உலூஹிய்யத் ருபூபிய்யத் அஸ்மாஉ வஸ்ஸிபாத் அம்சங்களில் அவனுக்கு இணை யாருமில்லை என்று நம்பிக்கை கொள்வதாகும்.
தவ்ஹீத் என்ற வார்த்தை, அல்லது அந்த மூல சொல்லிலிருந்து பிரிந்து வந்த அதே அர்த்தத்தை உணர்த்தும் சொற்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
இங்கு அஹத் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
(அல்குர்ஆன் : 5:73)
இந்த வசனத்தில் வாஹித் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பல குர்ஆனிய வசனங்கள் இருக்கின்றன.
أخرجه البخاري (7372 ) ومسلم ( 19 ) عن ابن عباس رضي الله عنهما قال : لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ : " إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.
(புகாரி : 7372 , முஸ்லிம் : 19)
இங்கு யுவஹ்ஹிதூ என்ற வினைச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.
مسلم ( 16 ) عن ابن عمر رضي الله عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسَةٍ : عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ ، وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ
இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை ஏகத்துப்படுத்துதல், தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் கொடுத்தல், நோன்பு வைத்தல், ஹஜ் செய்தல்.
(முஸ்லிம் : 16)
இந்த ஹதீஸில் யுவஹ்ஹத என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
தவ்ஹீத் என்ற வார்த்தை, மேல் குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களிலும் "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் யாரும் இல்லை முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்" என்று சாட்சி சொல்வதை உறுதிசெய்யும் முகமாக இடம்பெற்றுள்ளது. அதுவே இஸ்லாத்தின் அடிப்படையுமாகும். மேற்கூறப்பட்ட சில ஹதீஸ்களிலும் தெளிவாக இடம்பெற்றிருப்பதை காணலாம்.
அந்த வகையில் தவ்ஹீத், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் யாரும் இல்லை முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்ற சாட்சியம் கூறுவதன் அடிப்படையாகும். மேலும் இதுதான் அல்லாஹ் அவனது நபிக்கு வழங்கிய இஸ்லாம் என்று மேற்கூறப்பட்ட சில ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
அல்லாஹ் கூறுகிறான் ( நிச்சயமாக அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் ஆகும்) (ஆல இம்ரான் : 19)
மேலும் கூறுகிறான் ( யார் இஸ்லாத்தை அன்றி மார்க்கமாக எடுத்துக் கொள்கிறானோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, அவன் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பான்) (ஆல இம்ரான்: 85)
இவற்றை பார்க்கும் போது அறிஞர் தவ்ஹீதை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர் என்று புரிந்துகொள்ள முடியும்.
அவை பின்வருமாறு, தவ்ஹீதுர் ருபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிபாத்.
தவ்ஹீதுர் ரூபூபிய்யத் என்றால் ,
படைத்தல், ஆட்சி செய்தல், காத்தல், உயிரளித்தல், மரணிக்கச்செய்தல் போன்ற அனைத்துச் செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன் என்று உறுதி கொள்வதற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யத்’ என்று சொல்லப்படும். (இவையாவற்றிலும் அல்லாஹ் ஒருவனே தனித்துச் செயல்படுகிறான்.அவற்றில் யாருடைய உதவியும், துணையும், தலையீடும் இல்லை.)
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இது தொடர்பாக வந்திருக்கும் ஆதாரங்கள் ஏராளமானவை, அவற்றை பார்க்க இந்த கேள்வி இலக்கத்தை நாடவும் (13532)
எனவே யார் அல்லாஹ்வை அன்றி வேறொரு படைப்பாளி இருக்கிறான், அல்லது அவனை அன்றி வேறொரு ஆட்சியாளன் இவ்வுலகை நிர்வகிக்கிறான், என்று நம்பிக்கை கொள்கிறானோ!? அவன் ருபூபிய்யத் தவ்ஹீதில் குளறுபாடு செய்தவனாவான், மேலும் அல்லாஹ்வை நிராகரித்தவனாவான்.
ஆரம்பகால காஃபிர்கள் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை மேலோட்டமாக ஏற்றிருந்தனர். சில அம்சங்களில் முரண்பட்டிருந்தனர். அதற்கு ஆதாரமாக அவர்கள் கூறிய வார்த்தைகள், குர்ஆனின் வசனங்களாக பல இடங்களில் வந்துள்ளன.
• மேலும், (நபியே!) “நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?” என்று கேட்டால், “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்?
(அல்குர்ஆன் : 29:61)
• இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராயின்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “அல்ஹம்து லில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 29:63)
•மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
(அல்குர்ஆன் : 43:87)
இந்த வசனங்களில் காஃபிர்கள் அல்லாஹ்தான் படைப்பாளன், ஆட்சியாளன், நிர்வாகம் செய்பவன் என்று ஒப்புக்கொள்வதை காணமுடிகிறது. இருந்தாலும் அவர்களது இணைவைப்பு, பொய், மற்றும் அறிவின்மை காரணமாக அவர்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு மாத்திரம் வழங்கவில்லை. மேற்கூறப்பட்ட தனித்துவமான பண்புகள் கொண்டவனை தவிர, வேறு யாரும் வணங்கப்பட தகுதியற்றவர்கள். அவனது புகழ் மூலம் அவர்களின் இணைவைப்பை விட்டும் தூய்மையாகிவிட்டான்.
அதனால்தான் யார் தவ்ஹீதுர் ருபூபிய்யாவை முழுமையாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர் அவசியம் தவ்ஹீதுல்உலூஹிய்யாவை ஏற்றுக்கொள்வார்.
தவ்ஹீதுல் உலூஹிய்யா என்றால்
வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யப்படவேண்டும். அவனை அன்றி வேறு யாருக்கும் வணக்க வழிபாடுகளை செலுத்தக்கூடாது. அல்லாஹ் குர்ஆனில் கூறுவது போல "உமது இறைவன் திட்டமாக அவனை அன்றி வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று விதித்துள்ளான்" (அல்இஸ்ரா : 23)
"மேலும் அல்லாஹ்வையே வணங்கு அவனுக்கு இணை கற்பிக்காதே" (அந்நிஸா : 36)
அதாவது அடியார்களின் செயல்பாடுகள் மூலம் அல்லாஹ்வை தனித்துவப் படுத்தல். என்று புரிந்துகொள்ள முடியும்.
உலூஹிய்யா என்று சொல்லப்பட்டதன் காரணம்; தஅல்லுஹ் (التأله) என்ற மூல சொல்லிலிருந்து வந்ததாலாகும். அதன் பொருள் கண்ணியம் மற்றும் நேசத்துடனான வணக்கம் என்பதாகும்.
தவ்ஹீதுல் இபாதா என்றும் சொல்லப்படுவதன் காரணம்; அடியான், அல்லாஹ் ஏவியதை செய்வதன் மூலமும், அவன் தடுத்ததை விலகி நடப்பதன் மூலமும் அவனை வணங்குவதாலாகும்.
தவ்ஹீதுத் தலப் வல்கஸ்த் வல் இராதா என்றும் சொல்லப்படுவதன் காரணம், அடியான் எதை வேண்டின்லும் எதை நாடினாலும் அல்லாஹ்வுக்காகவே செய்வான். அதனால் அவன் அல்லாஹ்வை மனத்தூய்மையோடு வணங்குகிறான் என்பதாலாகும்.
தவ்ஹீதுல் உலூஹிய்யா வில் பல குளறுபாடுகள் இருப்பதால்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர், வேதங்கள் வழங்கப்பட்டன, மனிதர்கள் படைக்கப்பட்டனர், மார்க்கங்கள் விதியாக்கப்பட்டன, நபிமார்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் மத்தியில் பிரச்சினைகள் நிகழ்ந்தன.அதில் எல்லை மீறியவர்கள் அழித்தனர் நம்பிக்கை கொண்டவர்கள் வெற்றி பெற்றனர்.
யாராவது உலூஹிய்யாவில் குளறுபாடுகள் செய்தால், அதாவது அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடுகளை செலுத்தினால், அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராவார்.
நேர்வழியை விட்டு விலகியாவராவார்.
அல்லாஹ் பாதுகாப்பானாக..!
தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்றால்,
அல்லாஹ்வின் அனைத்துத் திருநாமங்களையும், பண்புகளையும் அவனது மாண்புக்குப் பொருந்தும் வகையில் நம்புதல், அடியான் அல்லாஹ்வுக்கு அவனது பண்புகளிலோ திருநாமங்களிலோ எந்தவித ஒப்புவமைகளும் இல்லை என்று நம்பிக்கை கொள்வான்.
தவ்ஹீத் அல்அஸ்மா வஸ்ஸிபாத் இரு அடிப்படை அம்சங்களில் தங்கியிருக்கிறது.
ஒன்று, உறுதிப்படுத்துதல்; அதாவது அல்லாஹ் தனக்கென திருநாமங்கள் மற்றும் பண்புகளை அவனுடைய வேதத்தில் உறுதிப்படுத்தியதையும் அவனது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் உறுதிப்படுத்தியதையும் எவ்வித மாற்றுக்கருத்துகளும் வழங்காது, அடிப்படை அர்த்தங்களை விட்டுவிடாது, அவனது மாண்புக்குப் பொருத்தமான விதத்தில் உறுதிப்படுத்துத்ல்.
இரண்டு; தூய்மை படுத்துதல்; அதாவது அல்லாஹ்வை சகல குறைகளிலுமிருந்து தூய்மை படுத்துதல் வேண்டும். அல்லாஹ் தனக்கு இல்லை என்று கூறிய குறையுடைய பண்புகளை, அவன் பக்கம் சேர்க்காமல் இருத்தல். அதற்கு ஆதாரமாக (அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன்தான் அனைத்தயும் செவியேற்பவன் பார்ப்பவன்) அல்லாஹ் தன்னை படைப்பினங்களுடன் ஒப்பாகுவதை விட்டும் தூய்மையாக்கிவிட்டான். மேலும் அவனது மாண்புக்குப் பொருத்தமான விதத்தில் பூரணத்துவம் மிக்க பண்புகளை சேர்த்துக் கொண்டான்.
நூல் : அல் ஹுஜ்ஜா பீ பயானில் மஹஜ்ஜா (305/01)
: லவாமிஉல் அன்வாரில் பஹிய்யா (57/01)